ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்பட எந்த நாடுகளும் வாங்கக்கூடாது - அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
Jul 19 2019 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் நாடுகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கப் போவதாக, அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கருத்து கூறிய அமெரிக்க ராணுவ கொள்கைகளுக்கான இணை செயலர் டேவிட் டிராச்டென்பெர்க், இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். ராணுவம் உள்ளிட்ட விஷயங்களில், இந்தியாவுடனான அமெரிக்க உறவு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலமாக உள்ளதாகவும், அதே நேரம், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை மற்றும் ஆயுதங்களை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் முடிவை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.