பிரக்சிட் ஒப்பந்த விவகாரம் - ஜுன் 7ம் தேதி பதவி விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவிப்பு
May 24 2019 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் தெரசா மே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் வரும் ஜூன் 7 ஆம் தேதி அவர் தனது கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்.