உளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை

Apr 24 2019 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொழும்பு தாக்‍குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்‍கையை தம்மிடம் தெரிவிக்‍காத, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரை பதவி விலக அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

உளவுத்துறை எச்சரிக்‍கையை பொருட்படுத்தாததே கொழும்பில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உளவுத்தகவல்களை புறக்கணித்ததற்காக மக்களிடம் இலங்கை அரசு நேற்று பகிரங்க மன்னிப்பு கோரியது. மேலும், தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையின் எச்சரிக்‍கையை யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இலங்கை அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். எச்சரிக்‍கை கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்‍கப்பட்டிருக்‍கும் என தெரிவித்த அவர், இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் என கூறினார். இந்நிலையில், உளவுத்துறை எச்சரிக்‍கையை, அதிபரான தமக்‍கும், பிரதமருக்‍கும் தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரை பதவி விலக சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00