இலங்கை தலைநகர் கொழும்பில் வெடிபொருள் நிரப்பிய லாரி மற்றும் வேன் நுழைந்திருப்பதாக வெளியான தகவலால் அச்சம் - அனைத்து காவல் நிலையங்களும் உஷாராக இருக்க அரசு எச்சரிக்கை
Apr 23 2019 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெடிபொருள் நிரப்பிய லாரி ஒன்றும், வேன் ஒன்றும் இலங்கை தலைநகர் கொழும்பில் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, நகரின் அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் மதியம் கூடியது. அப்போது பேசிய சபாநாயகர், நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், முழுவதும் வெடிபொருள் நிரப்பிய லாரி ஒன்றும், வேன் ஒன்றும், கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது, இதனையடுத்து, கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.