கொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு : நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதம்
Apr 23 2019 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்குப் பகுதியில் உள்ள Cauca என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பான் அமெரிக்கன் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.