உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்க தினம் அனுசரிப்பு - இலங்கை அரசு அறிவிப்பு
Apr 23 2019 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதாக அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி, இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.