ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை ஒடுக்‍கும் நடவடிக்‍கையில் முழுஒத்துழைப்பு அளிக்‍கப்படும் என அமெரிக்‍கா உறுதி - ஒசாமா பின்லேடன் மகன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்‍கு 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிப்பு

Mar 1 2019 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பணப்பரிமாற்றத்தைத் தடுத்து, அதை ஒடுக்கும் நடிவடிக்‍கைக்‍கு முழுஒத்துழைப்பு அளிக்‍கப்படும் என அமெரிக்‍கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்‍குதலுக்குக்‍ காரணமாக ஜெய்ஷ்-இ-முகமது ஒடுக்‍கும் இந்தியாவின் நடவடிக்‍கைக்‍கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், அந்த அமைப்பை முழுமையாக அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு பொருளாதார ரீதியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. தனது தந்தை பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழி வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை ஹம்சா வெளியிடும் வீடியோ மற்றும் ஆடியோக்‍கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் சர்வதேச ​தீவிரவாதியாகவும் அறிவிக்‍கப்பட்டிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00