பங்களாதேஷில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 50-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலி
Feb 21 2019 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 50-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர் Dhaka-வில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி, ரசாயன பொருட்கள் வைத்திருக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் வேகமாக பரவியது. விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் வரை வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் கவலைகிடமாக உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சமையல் சிலிண்டரில் இருந்து வெளியான எரிவாயு, ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தீ விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.