குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை : இந்தோனேசியாவில் பெரும் சர்ச்சை
Feb 12 2019 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில், குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் Papua மாகாணத்தில், செல்ஃபோன் திருடிய வழக்கில் வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக, அவரின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். வாய்க்குள்ளோ, அல்லது ஆடைகளுக்குள்ளோ பாம்பை விட்டுவிடுவதாக போலீசார் மிரட்டியதையடுத்து, அந்த வாலிபர் 2 முறை செல்ஃபோன் திருடியதாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சைக்குரிய வீடியோ இணையதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளதோடு தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.