அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் : ஈரான் கெடு
Feb 8 2019 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு உடனே வெளியேற வேண்டுமென ஈரான் கெடு விதித்துள்ளது.
ஐ.எஸ். அமைப்பினர் சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து 30 நாட்களுக்குள் அங்கிருந்து திரும்ப வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால் உள்ளூர் அரசியல் நெருக்கடி காரணமாக இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்துவதில் அவருக்கு தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துப் பகுதிகளும் அடுத்தவாரம் விடுவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் கடும் கோபமடைந்துள்ள ஈரான், ஆன்மீக தலைவர் அயதுல்லா கொமேனியின் மூத்த ஆலோசகர் அலி அக்பர், சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளார்.