சைப்ரஸ் கடலில் அதிதீவிர சூறாவளி : தண்ணீரை வானுயரத்திற்கு எடுத்துச் சென்ற அபூர்வ காட்சி -பார்வையாளர்கள் பரவசம்
Jan 3 2019 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான சைப்ரஸில், கடலில் ஏற்பட்ட அதிதீவிர சூறாவளி, தண்ணீரை வானுயரத்திற்கு எடுத்துச் சென்ற காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
சைப்ரஸ் நாட்டின் கைரன்யா நகரத்தின் கடல் பகுதியில் டொர்னாடோ எனப்படும் சூறாவளி ஏற்பட்டது. கடலில் ஏற்பட்ட இந்த சூறாவளி, பெரும்பாலும் நிலத்திற்கு வராது என்பதால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் இந்த நிகழ்வை பரவசத்துடன் கண்டு களித்தனர். அதிதீவிர சூறாவளி, கடல் மட்டத்தில் இருந்து தண்ணீரை வானுயர எடுத்துச் செல்லும் அரிய காட்சியை பலரும் செல்போன்களில் படம்பிடித்தனர்.
இந்த நிகழ்வை வானியல் வல்லுநர்களும் திரண்டு படம்பிடித்தனர்.