ரஷ்யாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : 24 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை ஒன்று உயிருடன் மீட்பு
Jan 2 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், 24 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில், 9 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கேஸ் கசிவால், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வீடுகள், சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 30 -க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளாக தேடும் பணி தொடரும் நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த, குழந்தையை, பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.