இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 429-ஆக உயர்வு : 5000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு
Dec 26 2018 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே சுனாமி பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக, கடலுக்கடியில் ஏற்பட்ட அதிர்வால் சுந்தா ஜலசந்தி பகுதியில் சுனாமி பேரலை எழுந்தது. இந்த சுனாமி, தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலையால், ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.
சுனாமி பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.