பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கை - வரும் 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு
Dec 17 2018 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை, வரும் 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக 'COP24' என்னும் பேச்சுவார்த்தை போலந்து நாட்டில் உள்ள Katowice நகரில் நடைபெற்றது. மிக நீண்ட பேச்சுவார்த்தையில், 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை, உலக நாடுகள் விரைவாக எட்ட வேண்டும் என்று இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.