ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு : தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு
Nov 21 2018 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில், திருமண மகால் ஒன்றில் மீலாது நபி விழா கூட்டம் நடந்தது. அப்போது அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் , 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் டேனிஷ் கூறும்பொழுது, முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த தாகுதலில் காயமடைந்தவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்ற்கு எந்தவொரு தீவிரவாத குழுவும் போறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தீவீர விசாரணை நடைபெற்று வருகிறது.