இலங்கையில், பிரதமர் பதவியை இழந்தார் ராஜபக்‍சே - நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்‍கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததாக சபாநாயகர் அறிவிப்பு

Nov 14 2018 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றத்தில், இன்று ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் ராஜபக்‍சே, பிரதமர் பதவியை இழந்தார்.

இலங்கையில், ரணில் விக்‍ரமசிங்கேவை பதவி நீக்‍கம் செய்துவிட்டு, ராஜபக்‍சேவை பிரதமராக நியமித்த அதிபர் சிறிசேன, தனது முடிவுக்‍கு பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் நாடாளுமன்றத்தையும் கலைத்தார். இதனை எதிர்த்து, ரணில் விக்‍ரமசிங்கே, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். அவருடன், அதிபரின் நடவடிக்‍கையை எதிர்த்து பலரும் வழக்‍கு தொடர்ந்தனர். இதனையடுத்து, அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்‍கு, டிசம்பர் 7-ம் தேதி வரை இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, திடீர் திருப்பமாக இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அப்போது, ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் ராஜபக்‍சேவுக்‍கு பெரும்பான்மை கிடைக்‍காததால், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்‍சே பிரதமர் பதவியை இழந்தார். அவையில், தொடர்ந்த கூச்சல், குழப்பம் நிலவியதால், நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00