2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - காங்கோ நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மற்றும் ஈராக்கை சேர்ந்த மருத்துவருக்கு பகிர்ந்தளிப்பு
Oct 5 2018 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கைச் சேர்ந்த நாடியா முராத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த Alfred Nobel நினைவாக, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் Stockhome-ல் இன்று அறிவிக்கப்பட்டது.
போரின்போது நிகழும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிய காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல, ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடியவரும், மனித உரிமை ஆர்வலருமான ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத்துக்கும் வழங்கப்படுகிறது.
அமைதிக்காக போராடிய இவர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.