2018-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - சாதனை படைத்த பெண் உள்ளிட்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
Oct 3 2018 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட் உள்ளிட்ட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட் என்ற பெண் விஞ்ஞானிக்கும், அமெரிக்காவைச் ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனை சேர்ந்த கிரிகோரி பி.விண்டர் ஆகியோருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்காக புதிய வேதியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.