2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்காக, 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
Oct 2 2018 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இயற்பியலுக்கான நோபல் பரிசு, டோனா ஸ்டிரிக்லேண்ட், ஆர்தர் அஷ்கின் உள்ளிட்ட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின், கனடா நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.