ஜிம்பாப்வேயில் வேட்டையர்களால் அனாதைகளாக்கப்படும் யானைகளை பராமரிக்கும் சேவையில் பெண்
Oct 1 2018 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜிம்பாப்வே நாட்டில், வேட்டையர்களால் அனாதைகளாக்கப்படும் யானைகளை பராமரித்து. மீண்டும் காட்டுக்குள் விடும் சேவையில் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் ஹராரேவில் 'Wild Is Life' என்ற பெயரில் யானைகளைப் பாதுகாக்கும் அமைப்பை Roxy Danckwerts என்ற பெண்மணி நடத்தி வருகிறார். வேட்டையர்களால் குடும்பத்தை இழந்து அனாதையாகும் குட்டி யானைகளை மீட்டு வளர்த்து பரமாரித்து, அவற்றை மீண்டும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விடும் மகத்தான சேவைகளை Roxy Danckwerts செய்து வருகிறார். குட்டியாக மீட்கப்பட்டு வரும் யானைகள், இங்குள்ளவர்களுடன் விரைவிலேயே நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றன.