கொரிய உச்சிமாநாட்டு : வடகொரியா சென்றார் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் - உற்சாக வரவேற்பு
Sep 18 2018 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரிய உச்சிமாநாட்டில் பங்கேற்க, தென்கொரிய அதிபர் Moon Jae-in வடகொரியா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரிய போரைத் தொடர்ந்து பகைவர்களாக விளங்கி வந்த தென்கொரியாவும், வட கொரியாவும், தற்போது தங்கள் பகைமை மறந்து நல்லுறவை மேம்படுத்த தொடங்கி உள்ளன. வட கொரிய அதிபர் Kim Jong Un-னும், தென்கொரிய அதிபர் Moon Jae-in-னும் ஏற்கனவே இருமுறை சந்தித்துப் பேசி உள்ளனர். இந்நிலையில், வடகொரிய அதிபர் Kim Jong Un-னுடன் இன்று நடைபெறவுள்ள 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, தென் கொரிய அதிபர் Moon Jae-in, 3 நாள் பயணமாக வடகொரியாவுக்கு சென்றார். வடகொரிய தலைநகர் Pyongyang-க்கு சென்றடைந்த Moon Jae-in-க்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.