லெபனானில் விலங்குகள், கோமாளிகள் இல்லாமல் சர்க்கஸ் சாகசம் : சாகசங்களால் நிறைந்த சர்க்கஸ் நிகழ்ச்சி - பார்வையாளர்கள் பரவசம்
Aug 14 2018 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லெபனானில், விலங்குகள் மற்றும் கோமாளிகள் இல்லாமல், வீரர்கள் செய்த பல்வேறு, சாகசங்களால் நிறைந்த சர்க்கஸ் நிகழ்ச்சி, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
லெபனானில் கோடைகாலத்தில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பெய்ட்டிடெய்ன் திருவிழா என்ற பெயரில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சர்க்கஸ் சாகச நிகழ்ச்சியில் கனடா, அமெரிக்கா, பெல்ஜியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு, பல்வேறு சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.
சர்க்கஸ் குழுவினரின் இந்த நிகழ்ச்சி, லெபனானில் நடைபெறும் இரண்டாவது நிகழ்ச்சியாகும்.