பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் தேதி மாற்றம் - வரும் 18ம் தேதியன்று பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு
Aug 11 2018 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், வரும் 18ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் ஜூலை 25-ம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுதேர்தலில் Tehreek-e-Insaf கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான், அந்நாட்டின் சுதந்திர தினமான வரும் 14 தேதியன்று பதவியேற்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இம்ரான்கான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான்கான், 3 தொகுதிகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், மீதமுள்ள 2 தொகுதிகளில் அவரது வெற்றி குறித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. வெற்றிபெற்ற 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக வரும் 18ம் தேதியன்று இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.