இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை : சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகிறார் இம்ரான்கான்
Jul 27 2018 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி, இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவைப்படும் நிலையில், சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகிவுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி, இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி முன்னிலையில் உள்ளது. இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 110 இடங்களிலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவு 63 இடங்களிலும், முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களிலும், சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகள் 36 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 21 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆட்சி அமைக்க தேவையான 137 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், 110 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், கூடிய விரைவில் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் பொது தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.