செவ்வாய் கிரகத்தில் ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதா? : மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு - விஞ்ஞானிகள் நம்பிக்கை
Jul 26 2018 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம், அங்கு ஏரிப்படுகை போன்ற அமைப்பு இருந்ததாக முன்னர் கண்டறிந்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனால் அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் மூலம், அங்கு ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 20 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாகவும், இதனால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.