ஜப்பானில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு 64 பேர் பலி - பல ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு- லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
Jul 8 2018 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு 64 பேர் பலியாகியுள்ளனர். பல இடங்களில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லட்சக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
ஜப்பான் மேற்கு பகுதியில் இடைவிடாத சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, 64 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் ஆறுகளின் கரைகள் உடைப்பெடுத்து, வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன. சுமார் 25 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். ககோஷிமா, எஹிமே, கோஃபு, ஜிஃபு உள்ளிட்ட இடங்களில் மழை நீடிக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.