லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் : லண்டன்வாழ் தமிழர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம்
May 24 2018 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து, லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். அரசின் இந்த கொடூரச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன் ஒன்று திரண்ட லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.