கம்போடியாவில் நடைபெற்று வரும் உலகத் தமிழர் மாநாடு - நிறைவு நாளான இன்று உலகளாவிய தமிழர் வர்த்தக மேம்பாடு குறித்து கருத்தரங்கம்
May 20 2018 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கம்போடியாவில் நடைபெற்று வரும் உலக தமிழர் மாநாட்டின் நிறைவு நாளான இன்று, உலகளாவிய தமிழர்களிடையேயான வணிக வர்த்தக மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில், உலக தமிழர் மாநாடு நேற்று தொடங்கியது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று உலக தமிழர்களிடையேயான வணிக வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்குழுவின் தலைவரான திரு.தணிகாச்சலம், தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், இலங்கை அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன், நடிகர் சரத்குமார், பாங்காங் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.காமராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
உலக அளவில் தமிழ்மொழியை வளர்த்தல், புதிய நூல்களை வெளியிடுவதை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிய கம்போடிய காவல்துறைக்கு இதில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநாட்டு அரங்கில் தோன்றிய காவல்துறை அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.