கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தை திறந்து வைத்த அதிபர் புதின் : புதிய பாலத்தில் சரக்கு வாகனம் ஓட்டி அசத்தினார்
May 16 2018 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலத்தில் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று அசத்தினார்.
ரஷ்யாவை, கிரீமியாவுடன் இணைக்கும் புதிய பாலத்தை, ரஷ்ய அதிபர் புதின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அதிபர் புதின், கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் நூற்றாண்டு கால கனவின் பலனாக கருதப்படுவதாக குறிப்பிட்டார். இந்த புதிய பாலம், கிரீமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் புதின் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து, புதிய பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த அதிபர் விளாடிமிர் புதின், சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே 19 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.