தமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும் - சிங்கப்பூர் அமைச்சர் உறுதி
May 14 2018 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும் என்றும், தமிழ் மொழியை காப்பதற்கு, அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர், திரு. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டி அளித்த திரு. ஈஸ்வரன், தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதில், அரசு உறுதியாக உள்ளது என்றும், இளைஞர்கள் தினந்தோறும், அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி, அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் என்று கூறினார். தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில், அதிகாரபூர்வ நான்கு மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது. பள்ளிகளில் தாய் மொழியாகவும், தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ் மொழியும் இடம் பெறுகிறது. அந்நாட்டு கரன்சியான, டாலரிலும், தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.