சுனாமி பாதிப்பின் 7-ம் ஆண்டு நினைவு தினம், ஜப்பானில் அனுசரிப்பு
Mar 12 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுனாமி பாதிப்பின் 7-ம் ஆண்டு நினைவு தினம், ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.
ஜப்பானில், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து எழுந்த மிகப்பெரிய சுனாமி அலை, தலைநகர் டோக்கியோ மற்றும் வடகிழக்கு கடற்கரையோரப் பகுதிகளை ஆவேசமாகத் தாக்கியது.
இதில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்களை சுனாமி அலைத் தாக்குதலால் உருக்குலைந்தன. மேலும், புகுஷிமா அணு உலையும் பழுதடைந்து, கதிர்வீச்சு அச்சத்தால் பல்லாயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சுனாமி அலை பாதிப்பின் 7-ம் ஆண்டு நினைவு தினம், ஜப்பானில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் Shinzo Abe உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.