இந்தோனேஷியாவில் அரியவகை உயிரினமான சுமத்ரா புலி கொல்லப்பட்டு உடல் பாகங்கள் விற்பனையால் அதிர்ச்சி
Mar 6 2018 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் மிகவும் அரியவகை உயிரினமான சுமத்ரா புலி கொடூரமாக கொல்லப்பட்டு, உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் Mandailing Natal என்ற கிராமத்தில் மிகவும் அரிய வகையாகக் கருதப்படும் சுமத்ரா இனப்புலி ஒன்று, கொடூரமாக கொல்லப்பட்டு, அதன் தோல் உரிக்கப்பட்டு ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டது வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து
வனத்துறையினர் நடத்திய விசாரணையில், புலியின் நகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த புலியின் உடலை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர். உலகில் தற்போது மொத்தம் 400 சுமத்ரா வகை புலிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.