பாகிஸ்தான் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் - சமூக ஆர்வலர் அஸ்மா ஜகாங்கீர் மாரடைப்பால் மரணம்
Feb 12 2018 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான Asma Jahangir, மாரடைப்பால் மரணமடைந்தார்.
பாகிஸ்தானில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் முக்கியமானவராகத் திகழ்ந்த Asma Jahangir-க்கு, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், 1978-ம் ஆண்டு எல்.எல்.பி. பட்டம் பெற்ற Asma Jahangir, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக்குக்கு எதிராக, கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குச் சென்றவர் Asma Jahangir என்பது குறிப்பிடத்தக்கது.