சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவு உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் : இன்றும் அதனை பார்த்து ரசிக்கலாம் என ஆய்வாளர்கள் அறிவிப்பு
Dec 4 2017 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவை, நேற்றிரவு உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பார்த்து ரசித்த நிலையில், இன்றும் அதனை பார்த்து ரசிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வானத்தில் ஏற்படும் அபூர்வ நிகழ்வான முழு பெருநிலவு நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால், அப்போது தோன்றும் பவுர்ணமி, முழு பெருநிலவாக காட்சியளிக்கும். அதன்படி, இந்த ஆண்டின் கடைசி பவுர்ணமி நாளான நேற்று, சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவு காட்சியளித்தது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய முழு பெருநிலவை பொதுமக்கள் பார்த்து ரசித்த நிலையில், வேறு சில பகுதிகளில் இன்று சூப்பர் மூனை பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், வரும் ஜனவரி 1 மற்றும் 31-ம் தேதியும் முழு பெருநிலவு தோன்றும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.