ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து பதற்றம் - மாயமான அதிபர் முகாபே, ராணுவ தளபதியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியீடு

Nov 17 2017 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபேவின் நிலை குறித்து கேள்வி எழுந்த நிலையில், ராணுவ தளபதியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த அதிபர் முகாபேவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். 93 வயதான முகாபேவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மனைவியை அதிபராக்க முகாபே முயற்சி செய்தார். இந்நிலையில், ராணுவம் தலையிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனைதொடர்ந்து அதிபர் முகாபேவின் கதி என்னவாயிற்று என உலக நாடுகள் அச்சம் தெரிவித்த நிலையில், ராணுவ தளபதி ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவெங்காவுடன், முகாபே இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் செக்றாமாயி துணை பாதுகாப்பு அமைச்சர் கெம்போ முஹாடி ஆகியோர் தென் ஆப்ரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00