பஹ்ரைனில் எரிவாயு குழாய் தீப்பிடித்து பெரும் விபத்து : தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
Nov 12 2017 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஹ்ரைனில் எரிவாயு குழாய் தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஹ்ரைனில் உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர். இந்த தாக்குதலில் சேதமடைந்த எரிவாயு கடும் தீப்பிழம்புகளுடன் பற்றிஎரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
வானைத் தொடும் அளவிற்கு கொளுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சேதம் குறித்தோ, உயிரிழப்புகள் குறித்தோ தகவல்கள் வெளியாக வில்லை.