திருப்பரங்குன்றம் கோயில் அருகே கண்மாயில் லட்சக்கணக்கான காலாவதியான மருந்து பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
Nov 6 2017 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே கண்மாயில் லட்சக்கணக்கான காலாவதியான மருந்து பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே உள்ள பானாங்குளம் கண்மாய், நிலையூர், கைத்தறிநகர், தென்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த கண்மாய் தூர்வாரப்படாததால் முற்செடிகள் முளைத்தும், குப்பைகள் சூழ்ந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், இந்த கண்மாயில் லட்சக்கணக்கில் மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்துப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுகாதார சீர்கேடுகள் குறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த கண்மாய் முழுவதும் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மது அருந்தும் இடமாகவும் மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.