அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலி : படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Nov 6 2017 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள Baptist தேவாலயத்தில், நேற்று காலை ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனையடுத்து, தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய பலரை, ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய ஆசாமியை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00