மெக்சிகோவில் 4 நாள் கோமாளிகள் மாநாடு : பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கோமாளிகள் பங்கேற்பு
Oct 19 2017 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் தொடங்கியுள்ள 4 நாள் கோமாளிகள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கோமாளிகள் பங்கேற்றுள்ளனர்.
கோமாளிகள் தங்களுடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய கலைகளை கற்றுக்கொள்ளவும் ஆண்டுதோறும் மெக்சிகோ நாட்டிலுள்ள மெக்சிகோ நகரில் மாநாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி 22வது வருட கோமாளிகள் மாநாடு நேற்று தொடங்கியது. 14 நாடுகளைச் சேர்ந்த 450 கோமாளிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆடல், பாடலுடன் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்ற காட்சி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
பேரணியில் சென்ற கோமாளிகளுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஏராளமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஒருநிமிடமாவது அவற்றிலிருந்து விடுபட்டு சிரித்து மகிழச்செய்வதே தங்களுடைய நோக்கம் என கோமாளிகள் தெரிவித்தனர்.