பெருவில் அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் விதமாக 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் நதிகளில் விடப்பட்டன
Oct 19 2017 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில், அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் விதமாக ஐந்தாயிரம் ஆமை குஞ்சுகள் அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் விடப்பட்டன.
முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக சில வகை ஆமைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதால், Taricaya என்ற ஆமை இனம், அழிவின் விளம்பில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆமைகளை பராமரிக்க பெரு நாட்டு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட Taricaya ஆமைகளின் முட்டைகள், செயற்கையாக பொரிக்கப்பட்டு, ஆமைக் குஞ்சுகளாக அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் விடப்பட்டன. இதனால், அழிந்துவரும் ஆமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அப்பகுதி சுற்றுலாத்தளமாகவும் மாற்றமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.