அண்டை நாடுகளுடான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு - சீன அதிபர் Xi Jinping அறிவிப்பு
Oct 19 2017 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்டை நாடுகளுடான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளதாக சீன அதிபர் Xi Jinping தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் Beijing-ல், சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் Xi Jinping, அண்டை நாடுகளுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, சீன அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், சீன நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர நலன், உள்ளார்ந்த தன்மை, நட்புறவு, உண்மை ஆகியவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதில் சீனா ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த அதிபர் Xi Jinping, பயங்கரவாதத்தை எல்லா வடிவங்களிலும், சீனா கடுமையாக எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.