அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி - 2 பேர் படுகாயம்

Oct 19 2017 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Maryland மாகாணத்தின் ஹார்போர்டு கவுண்டி என்ற இடத்தில் வணிக பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவுக்கு வந்த நபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், திடீரென எதிரில் இருந்த நபர்களை சரமாரியாக சுட்டார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர், பின்னர் அங்கிருந்து உடனே தப்பியோடிவிட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 37 வயதான Radee Prince என்பதைக் கண்டறிந்தனர். மேலும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00