அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிவேகமாக பரவிவரும் காட்டுத்தீ : பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
Oct 16 2017 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிவேகமாக பரவிவரும் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீ தொடர்ந்து ஒரு வாரமாக கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், காட்டுத்தீ மேலும் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர்.
இந்த தீ விபத்தால், சாண்டா ரோசா நகர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். மேலும் இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.