சோமாலியா தலைநகர் மொகடிஸ்யுவில் தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 279ஆக அதிகரிப்பு

Oct 16 2017 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியா தலைநகர் Mogadishu-வில் உள்ள உணவு விடுதியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 279ஆக அதிகரித்துள்ளது.

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும், இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் Mogadishu நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதியை குறிவைத்து, தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. Mogadishu-வில் நடத்தப்பட்டமிகப்பெரிய தாக்குதல் என்ற வகையில், இந்த சம்பவத்துக்கு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்க சோமாலியா அதிபர் முஹம்மது அப்துல்லாஹி முஹம்மது உத்தரவிட்டுள்ளார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்ததானம் அளிக்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00