சீனாவில் ஸ்கைவாக் எனப்படும் கண்ணாடிப் பாலத்தில் நடந்து சென்றவர்கள் ஒவ்வொரு அடியின் போதும் அது உடைவது போன்ற தோற்றம் ஏற்பட்டு அதிர்ச்சி
Oct 11 2017 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் ஸ்கைவாக் எனப்படும் கண்ணாடிப் பாலத்தில் நடந்து சென்றவர்கள், ஒவ்வொரு அடியின் போதும் அது உடைவது போன்ற தோற்றம் ஏற்பட்டதையடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.
வடக்கு சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் 3 ஆயிரத்து 800 அடி உயரத்தில், பிரமாண்டமாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் நடந்து செல்வோருக்கு சிலிர்ப்பு ஏற்படச் செய்யும் வகையில், அதிநவீன தொழில் நுட்பங்கள் மூலம், கால்வைக்கும் இடத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்படும் வகையில் சென்சார்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உடைவதைப் போன்ற ஒலியும் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பாலத்தில் முதல் முறையாக நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.