பாகிஸ்தானில் குவெட்டா நகர் அருகே தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு : அஃப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்
Oct 10 2017 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகர் அருகே, தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் அஃப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
அஃப்கனிஸ்தான் நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறைக்கு பயந்து தப்பி வந்த ஹாஸாரா இன மக்கள், பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகர் அருகேவசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அருகாமையில் உள்ள சந்தைப் பகுதியில் வியாபாரம் செய்வதற்காக ஒரு வேனில் காய்கறிகளை ஏற்றிச் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் சென்ற மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் உயிரிழந்தனர்.
சமீபகாலமாக, பாகிஸ்தானில் ஹஸாரா இனத்தவர்கள் மற்றும் சன்னி முஸ்லிம்கள் மீது, தலிபான்களும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.