சீனாவின் குயிசோ மாகாணத்தை அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் - 4 லட்சம் காடைகள் அழிப்பு
Aug 19 2017 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் குயிசோ மாகாணத்தில் காடைகள் மூலமாக பறவை காய்ச்சல் பரவுவது தெரியவந்ததை அடுத்து 4 லட்சம் காடைகள் அழிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிசோ மாகாணத்தில் ஏராளமான காடை மற்றும் கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் காடைகளுக்கு H5 N6 என்ற வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் பத்தாயிரம் காடைகள் வரை அடுத்தடுத்து இறந்ததாகவும் அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுமார் 4 லட்சம் காடைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குயிசோ மாகாணத்தில் பரவிய பறவை காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், காடை மற்றும் கோழி சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீன வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.