பின்லாந்து நாட்டில் பொதுமக்கள் மீது மர்மநபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலி
Aug 19 2017 7:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பின்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் டுர்கு என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள பிரபல மார்கெட் பகுதியில், அதிகளவில் மக்கள் கூடியிருக்கும் போது, அங்கு கையில் கத்தியுடன் நுழைந்த நபர், பொதுமக்கள் மீது சரமாரியாக குத்தினார். இதனால், பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதாகவும், 8-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் மீது பல்வேறு வகையான தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது தீவிரவாதி வேனை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.