சீனாவில் லீ என்பவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்ற பிறகும் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இதயத்தை இயங்க செய்த அதிசய சம்பவம்
Aug 18 2017 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் லீ என்பவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்ற பிறகும் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இதயத்தை இயங்க செய்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
33 வயது நிரம்பிய லீ என்பவர் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி கடந்த 6ம் தேதி செங்டே மருத்துவமனையில் இரவு 9 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் முயற்சித்த மருத்துவர்கள் லீயின் இதயம் செயல்படாமல் நின்றுவிட்டதாக 10.37 மணிக்குத் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முயற்சியாக கார்டியோபல்மனரி முறையில் மருத்துவர்கள் மீண்டும் இதயத்தை இயங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டனர். இறுதியில் 11.28 மணிக்கு அவரது இதயம் மீண்டும் உயிர்பெற்றது.
மருத்துவ உலகில் அதிசயமாக நிகழும் இதுபோன்ற சம்பவங்களில் நம்பமுடியாததாக இருப்பதாக லீயை உயிர்ப்பித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். 30 நிமிடங்களுக்கு முன்னதாக நின்று போன இதயம் மீண்டும் உயிர்பெற்றது அதிசயமான நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார். உயிர்பிழைத்த லீ தற்போது நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.