ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அதிபர் டிரம்ப்-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்
Aug 17 2017 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வெள்ளை இன ஆதிக்கவாதிகள் நடத்திய வன்முறை பேரணியை கண்டித்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அதிபர் டிரம்ப்-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் Charlottesville நகரில் வெள்ளை இன ஆதிக்க இயக்கங்களின் சார்பாக கடந்த 12-ம் தேதி பேரணி நடைபெற்றது. இனவெறி முழக்கத்துடன் நடைபெற்ற இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை இன ஆதிக்க மனப்பான்மையை ஆதரிக்கும் வகையில் வன்முறைக்கு மறுபக்கம் இருப்பதாக குறிப்பிட்டார். அதிபர் டிரம்ப்-ன் இந்த கருத்துக்கு அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் கண்டனம் எழுந்துள்ளது. டிரம்ப்-க்கும் எதிராக ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்ததுடன் வடகொரியாவுக்கு எதிராக போர் வெறியுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.